வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கை அருகே வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் வட தமிழக கடற்கரையில் மையம் கொண்டுள்ளது. இது சென்னைக்கு 220 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் புயல் 5 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிட்வா புயல் வலுவிழந்து சென்னையை நெருங்கும்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி கரையை கடக்கும என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
















