கும்பாபிஷேக விழாவில் மயக்கமடைந்த பக்தர்கள்!
Jan 14, 2026, 03:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கும்பாபிஷேக விழாவில் மயக்கமடைந்த பக்தர்கள்!

Murugesan M by Murugesan M
Dec 1, 2025, 05:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

உலகின் முதன்முதலில் தோன்றிய ஸ்தலமாகவும், உலக புகழ்பெற்ற கும்பகோணம் மகாமகம் விழா நடைபெறுவதற்கு முக்கிய கோயிலாகவும் ஆதி கும்பேஸ்வரர் கோயில் விளங்கி வருகிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்தக் கோயிலில் கடந்த 27ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழாவுக்கான பூஜைகள் தொடங்கின.

எட்டு கால யாகசாலை பூஜை நிறைவடைந்ததை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் கடங்களை தலையில் சுமந்தபடி கோயிலைச் சுற்றி வலம் வந்தனர்.

தொடர்ந்து கோயில் விமான கோபுர கலசம் உட்பட பரிவார தெய்வ கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் அமைச்சர்கள் சேகர்பாபு, கோவி செழியன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதனிடையே, கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்களில் ஒரு சிலர் மயக்கமடைந்தால் பதற்றம் நிலவியது. மயக்கமடைந்த முதியவர் மற்றும் பெண் ஆகியோரை கோயில் ஊழியர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

கும்பாபிஷேக விழாவில் ஏன் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யவில்லை என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, எதிர்பாராமல் நடந்த சம்பவம் என அலட்சியமாக அமைச்சர் சேகர்பாபு பதிலளித்து சென்றார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இந்து மகா சபை நிர்வாகி நிரஞ்சன், கோயில் கும்பாபிஷேக விழாவிற்காகப் பாஸ் வழங்கியதில் குளறுபடிகள் நடந்துள்ளதாகவும், நிறைய பேர் விஐபி பாஸ் பெற்று உள்ளே சென்றதாகவும் குற்றம்சாட்டினார்.

மூத்த குடிமக்களும், ஆன்மீகப் பெரியோர்களும் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள அறநிலையத்துறை ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

மேலும், எந்த ஒரு கும்பாபிஷேக விழாவாக இருந்தாலும், அந்த இடத்தில் தீயணைப்புத்துறை, மருத்துவ முகாம், தற்காலிக கழிவறை வசதி உள்ளிட்டவைகளை அரசு அமைத்துத் தரவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

Tags: Devotees fainted during the Kumbabhishekam ceremonyமயக்கமடைந்த பக்தர்கள்
ShareTweetSendShare
Previous Post

திருப்பதியில் கனமழை : பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம்!

Next Post

நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் உண்மையை அம்பலப்படுத்துவேன் – திருப்பூர் மேயர்

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies