சேலத்தில் இருந்து ரயில் மார்க்கமாக காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு புறப்பட்ட குழுவினருக்கு, அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வாழ்த்து தெரிவித்து உற்சாகமாக வழியனுப்பினர்.
தேச ஒற்றுமையில் மாநிலங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் நோக்கில், மத்திய அரசு தொடர்ந்து 4-வது ஆண்டாக காசித் தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இதன் வாயிலாக சாதாரண ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள், முழுமையாக மத்திய அரசின் செலவில் காசிக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சேலம் ரயில் நிலையத்தில் இருந்து 53 பேர் கொண்ட குழுவினர் நேற்று காசி புறப்பட்டனர். சிறப்பு ரயில் மூலம் புறப்பட்ட குழுவினருக்கு அவர்களின் குடும்பத்தாரும், நண்பர்களும் வாழ்த்து தெரிவித்து உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.
















