உறையூர் சேலைகளுக்கு புவிசார் குறியீடு - கடனுதவி வழங்க உற்பத்தியாளர்கள் கோரிக்கை!
Mar 15, 2026, 03:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

உறையூர் சேலைகளுக்கு புவிசார் குறியீடு – கடனுதவி வழங்க உற்பத்தியாளர்கள் கோரிக்கை!

Murugesan M by Murugesan M
Dec 4, 2025, 07:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி உறையூரில் உற்பத்தி செய்யப்படும் பருத்தி சேலைகளுக்கு புவிசார் குறியீட்டை மத்திய அரசு வழங்கியது. பரம்பரை, பரம்பரையாகப் பருத்தி சேலை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களுக்குக் கடனுதவி வழங்க உதவ வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

திருச்சி மாநகர் உறையூரில் தயாரிக்கப்படும் பருத்தி சேலைகள் சுத்தமான பருத்தி நூலில் மட்டுமே தயாரிக்கப்படும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது. நுணுக்கமான வடிவமைப்புடன் வெப்பம் மற்றும் குளிரையும் தாங்கக் கூடியதாக மட்டுமல்லாமல் நீடித்து உழைக்கும் தன்மை கொண்டதாகவும் இந்தப் பருத்தி சேலைகள் விளங்கிவருகின்றன.

தனித்துவமிக்க இந்தப் பருத்தி சேலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டிருப்பது அச்சேலைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2022ம் ஆண்டு புவிசார் குறியீடு கோரி விண்ணப்பிக்கப்பட்ட நிலையில், தரவுகள், புள்ளிவிவரங்கள், சேலைகளின் மாதிரிகள் என மத்திய அரசு கோரிய அனைத்துவிதமான விவரங்களும் வழங்கப்பட்டதன் அடிப்படையில் தற்போது அதற்கான அனுமதி கிடைத்துள்ளது.

உறையூர் பருத்தி சேலையின் விற்பனை கடந்த காலங்களில் குறைந்து வந்ததன் விளைவால், பலர் இத்தொழிலை விட்டே வெளியேறிவிட்ட நிலையில் தற்போது கிடைத்திருக்கும் இந்தப் புவிசார் குறியீடு மீண்டும் அவர்கள் சேலை உற்பத்தி செய்யும் தொழிலுக்குள் வருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

பருத்தி சேலைக்கு புவிசார் குறியீடு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாக இருந்தாலும் மறுபுறம் கைத்தறி பருத்தி நூலால் உற்பத்தி செய்யப்படும் சேலைகளை விற்பதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதாகவும் பரம்பரை பரம்பரையாக இத்தொழிலில் ஈடுபட்டுவரும் உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

புவிசார் குறியீடு கிடைத்திருப்பதன் மூலம் இந்தியா மட்டுமல்லாது உலகளவில் பருத்தி சேலையை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கும் நிலையில், தங்களின் தொழிலைப் பாதுகாக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகள் கடன் வழங்கி உதவ வேண்டும் எனவும் பருத்தி சேலை உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: newsTodayபுவிசார் குறியீடுGeographical Indication for Uraiyur sarees - Manufacturers request for loan assistanceஉறையூர் சேலைகளுக்கு புவிசார் குறியீடுஉற்பத்தியாளர்கள்
ShareTweetSendShare
Previous Post

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முதலமைச்சர் நடத்தும் மோசடி நாடகம் – எல். முருகன் குற்றச்சாட்டு!

Next Post

ஜனரஞ்சக தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன்!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies