திருப்பரங்குன்றம் செல்லும் பக்தர்களை கைது செய்து திமுக காட்டாட்சி நடத்தி வருவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் திமுக அரசு ஜனநாயக படுகொலையை செய்துள்ளதாக தெரிவித்தார்.
திமுக அரசு உயர்நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தவில்லை என்றும், CISF வீரர்களுடன் இணைந்து தீபத்தை ஏற்றும் உத்தரவையும் செயல்படுத்தவில்லை என்றும் அவர் சாடினார்.
“திருப்பரங்குன்றம் செல்வோரை கைது செய்து திமுக காட்டாட்சி நடத்தி வருகிறது என்றும், தமிழகத்தில் அராஜகம் செய்துவிட்டு, நாடாளுமன்றத்தில் திமுக எம்.பிக்கள் நாடகம் நடத்துகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
ஒருவரின் வழிபாட்டு உரிமையை தடுக்கும் உரிமை யாருக்கும் கிடையாது என்றும், ஓட்டு வங்கிக்காக ஒரு சாரரை மட்டும் தட்டிக் கொடுக்க திமுக இவ்வாறு செய்வதாகவும் அவர் கூறினார்.
















