நாடாளுமன்ற செயல்களை முடக்குவது ஜனநாயகத்திற்கு தீங்கு விளைவிக்கும் என காங்கிரஸ் எம்.பி.சசிதரூர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் SIR உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எழுப்பி காங்கிரஸ் கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக பேசிய காங்கிரஸ் எம்.பி.சசிதரூர் நாட்டின் மிக உயர்ந்த இடமாக நாடாளுமன்றம் திகழ்வதாக தெரிவித்தார். அதன் மதிப்பை குறைக்கும் விதமாக சபைகள் முடக்கப்படுவது ஜனநாயகத்திற்கு சொல்லமுடியாத தீங்கு விளைவிக்கும் எனவும் கூறினார்.
















