வந்தே மாதரம் பாடலை வெறுத்த முஸ்லிம் லீக் முன்பு காங்கிரஸ் சரணடைந்து விட்டது : பிரதமர் மோடி
Jan 14, 2026, 03:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

வந்தே மாதரம் பாடலை வெறுத்த முஸ்லிம் லீக் முன்பு காங்கிரஸ் சரணடைந்து விட்டது : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Dec 8, 2025, 02:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வந்தே மாதரம் பாடலை வெறுத்த முஸ்லிம் லீக் முன்பு காங்கிரஸ் சரணடைந்து விட்டதாகப் பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.

நாட்டின் தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு நிறைவு குறித்த சிறப்பு விவாதத்தை மக்களவையில் தொடங்கி வைத்துப் பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், வந்தே மாதரம் 150வது ஆண்டு விழா விவாதத்தில் பங்கேற்பது பெருமை எனத் தெரிவித்தார். வந்தே மாதரம் இயற்றப்பட்டபோது நாடு அடிமைச் சங்கிலியில் சிக்கியிருந்தது என்றும், வந்தே மாதரம் ஊக்குவித்த சுதந்திர போராட்டத்தினால் நாம் இன்று சுதந்திரமாக அமர்ந்து இருக்கிறோம் எனவும் தெரிவித்தார்.

2047ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க வந்தே மாதரம் நம்மை ஊக்குவிகும் என்றும், தாய்நாட்டை மீட்பதற்கான கருவியாக வந்தே மாதரம் திகழ்ந்தது எனவும் குறிப்பிட்டார்.

ஆங்கிலேயர்களுக்கு எதிராகக் கப்பல் ஓட்டி மிகப்பெரிய சுதந்திர உணர்வை வெளிப்படுத்தியவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை எனப் புகழாரம் சூட்டினார்.

தமிழ் மொழியில் கவிதைகளை எழுதி ஆங்கிலேயர்களை கலங்கடிக்க வைத்தவர் சுப்பிரமணிய பாரதி எனக்கூறிய பிரதமர் மோடி, பாரதியாரின் தாயின் மணிக்கொடி பாரீர் என்ற பாடலை பாடி உணர்ச்சிவசத்துடன் பேசினார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, வந்தே மாதரம் பாடல் இந்தியாவின் தேசிய கீதமாக வேண்டும் என மகாத்மா காந்தி விரும்பியதாகக் கூறினார்.

வந்தே மாதரம் பாடலுக்கு எதிராக மிகப்பெரிய துரோகம் செய்யப்பட்டது எனக் குற்றம்சாட்டிய பிரதமர் மோடி, வந்தே மாதரம் பாடலை வெறுத்த முஸ்லிம் லீக் கட்சியை முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆதரித்தாகக் கூறினார்.

முஸ்லிம் லீக் முன்பு காங்கிரஸ் சரணடைந்து விட்டதாக விமர்சித்த பிரதமர் மோடி, நாட்டை இரண்டாகப் பிளக்கும் விஷயத்தில் காங்கிரஸ் கட்சி மொத்தமாகச் சரணடைந்து விட்டது எனக் குற்றம்சாட்டினார்.

Tags: PM Modinewstoday newsCongress surrenders to Muslim League for hating Vande Mataram song: PM Modi
ShareTweetSendShare
Previous Post

விமான சேவை படிப்படியாக மீட்டெடுக்கப்பட்டு வருகிறது – இண்டிகோ

Next Post

ராகுலுக்கு ராம் மோகன் நாயுடு மத்திய அமைச்சர் பதிலடி!

Related News

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

ஜப்பானிய வாள்வீச்சு கலையான கென்ஜுட்சுவை கற்ற பவன் கல்யாண் – குவியும் பாராட்டு!

இந்தியாவை தாக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்கொலை படையினர் தயார் – மசூத் அசார் மிரட்டல்!

விவசாயிகளுக்கு உயர்தர விதை கிடைப்பதை உறுதி செய்யும் மசோதா- பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies