வந்தே மாதரம் பாடலை வெறுத்த முஸ்லிம் லீக் முன்பு காங்கிரஸ் சரணடைந்து விட்டது : பிரதமர் மோடி
Sep 12, 2026, 09:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

வந்தே மாதரம் பாடலை வெறுத்த முஸ்லிம் லீக் முன்பு காங்கிரஸ் சரணடைந்து விட்டது : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Dec 8, 2025, 02:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வந்தே மாதரம் பாடலை வெறுத்த முஸ்லிம் லீக் முன்பு காங்கிரஸ் சரணடைந்து விட்டதாகப் பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.

நாட்டின் தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு நிறைவு குறித்த சிறப்பு விவாதத்தை மக்களவையில் தொடங்கி வைத்துப் பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், வந்தே மாதரம் 150வது ஆண்டு விழா விவாதத்தில் பங்கேற்பது பெருமை எனத் தெரிவித்தார். வந்தே மாதரம் இயற்றப்பட்டபோது நாடு அடிமைச் சங்கிலியில் சிக்கியிருந்தது என்றும், வந்தே மாதரம் ஊக்குவித்த சுதந்திர போராட்டத்தினால் நாம் இன்று சுதந்திரமாக அமர்ந்து இருக்கிறோம் எனவும் தெரிவித்தார்.

2047ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க வந்தே மாதரம் நம்மை ஊக்குவிகும் என்றும், தாய்நாட்டை மீட்பதற்கான கருவியாக வந்தே மாதரம் திகழ்ந்தது எனவும் குறிப்பிட்டார்.

ஆங்கிலேயர்களுக்கு எதிராகக் கப்பல் ஓட்டி மிகப்பெரிய சுதந்திர உணர்வை வெளிப்படுத்தியவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை எனப் புகழாரம் சூட்டினார்.

தமிழ் மொழியில் கவிதைகளை எழுதி ஆங்கிலேயர்களை கலங்கடிக்க வைத்தவர் சுப்பிரமணிய பாரதி எனக்கூறிய பிரதமர் மோடி, பாரதியாரின் தாயின் மணிக்கொடி பாரீர் என்ற பாடலை பாடி உணர்ச்சிவசத்துடன் பேசினார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, வந்தே மாதரம் பாடல் இந்தியாவின் தேசிய கீதமாக வேண்டும் என மகாத்மா காந்தி விரும்பியதாகக் கூறினார்.

வந்தே மாதரம் பாடலுக்கு எதிராக மிகப்பெரிய துரோகம் செய்யப்பட்டது எனக் குற்றம்சாட்டிய பிரதமர் மோடி, வந்தே மாதரம் பாடலை வெறுத்த முஸ்லிம் லீக் கட்சியை முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆதரித்தாகக் கூறினார்.

முஸ்லிம் லீக் முன்பு காங்கிரஸ் சரணடைந்து விட்டதாக விமர்சித்த பிரதமர் மோடி, நாட்டை இரண்டாகப் பிளக்கும் விஷயத்தில் காங்கிரஸ் கட்சி மொத்தமாகச் சரணடைந்து விட்டது எனக் குற்றம்சாட்டினார்.

Tags: PM Modinewstoday newsCongress surrenders to Muslim League for hating Vande Mataram song: PM Modi
Share
Tweet
SendShare
Previous Post

விமான சேவை படிப்படியாக மீட்டெடுக்கப்பட்டு வருகிறது – இண்டிகோ

Next Post

ராகுலுக்கு ராம் மோகன் நாயுடு மத்திய அமைச்சர் பதிலடி!

Related News

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies