தூத்துக்குடியில் கனமழை பெய்து 10 நாட்கள் கடந்தும், மயானத்தில் குளம் போல் தண்ணீர் தேங்கிக் நிற்பதால் சடலங்களை புதைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி நகர் பகுதியில் கடந்த 23ம் தேதி கனமழை பெய்தது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. 10 நாட்களை கடந்தபோதும் மயானத்தில் குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது.
இதனால் அங்கு சடலங்களை புதைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வெள்ளநீரை வெளியேற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிறிஸ்தவ பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















