நாடாளுமன்றம் தாக்கப்பட்டதன் 24-ம் ஆண்டு தினத்தையொட்டி உயிர்நீத்தவர்களுக்கு குடியரசுத் துணை தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
தலைநகர் டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தின் மீது, கடந்த 2001ல் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் போலீசார், பாதுகாப்பு படையினர் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், நாடாளுமன்ற தாக்குதலின் 24-ம் ஆண்டு தினத்தையொட்டி, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நினைவிடத்தில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
















