புதிய உயர்கல்வி ஆணையம் அமைப்பதற்கான விக்சித் பாரத் சிக்ஷா அதிக்ஷன் மசோதா மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது.
புதிய தேசிய கல்விக் கொள்கை பரிந்துரைப்படி, பல்கலைக்கழக மானிய குழு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில், மற்றும் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் ஆகியவை கலைக்கப்பட்டு, அதற்கு மாற்றாக அனைத்தும் இந்திய உயர்கல்வி ஆணையத்தின் கீழ் கொண்டு வரப்பட உள்ளது.
இதன் மூலம் கலை, அறிவியல் பல்கலைக்கழகங்கள், பொறியியல், தொழில் நுட்ப பல்கலைக்கழகங்கள், ஆசிரியர் பயிற்சி பல்கலை கழகங்கள் ஒரே ஆணையத்தின் கீழ் கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக, இந்திய உயர்கல்வி ஆணைய மசோதா கொண்டு வரப்பட்டது. விக்சித் பாரத் சிக்ஷா அதிக்ஷன் என்ற புதிய மசோதா மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழு விவாதத்திற்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
















