எடப்பாடி தொகுதியில் முடிவுற்ற பணிகளை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதியில், தொகுதி மேம்பாட்டு திட்டம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி வளர்ச்சி திட்டத்தின் மூலம் 3 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்படவுள்ள திட்டப் பணிகளுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
இதனை தொடர்ந்து, எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நெடுங்குளம், வெள்ளரிவெள்ளி, இருப்பாளி, சித்தூர், வீரக்கல், கொங்கணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள குடிநீர் தொட்டிகள் மற்றும் அரசுப் பள்ளி வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தை அவர் திறந்து வைத்தார்.
மேலும், அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்த உடன் வறண்ட 100 ஏரிகளை நிரப்பும் திட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
















