அக்னிபாத் திட்டத்தின் மூலம் தென்காசி மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ராணுவத்திற்கு தேர்வு செய்யப்பட்டதை நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்.
அக்னிபாத் திட்டத்தின் மூலம் ராணுவத்திற்கு ஆள் சேர்க்கப்பட்டு வரும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீரர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பானது இந்திய ராணுவ மூலம் வெளியிடப்பட்டது.
அதனடிப்படையில், கடந்த ஜூன் மாதம் அவர்களுக்கான நுழைவுத் தேர்வு ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது. அதில் தேர்ச்சி பெற்ற வீரர்களுக்குக் கடந்த செப்டம்பர் மாதம் உடற்தகுதி தேர்வு மற்றும் மருத்துவ தகுதி தேர்வானது நடைபெற்றது.
இந்த 3 நிலைகளிலும் தேர்ச்சி பெற்று, தென் மாவட்டங்களில் இருந்து சுமார் ஆயிரத்து 340 வீரர்கள் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், தென்காசி மாவட்டத்தில் மட்டும் 300க்கும் மேற்பட்ட வீரர்கள் அக்னிபாத் திட்டத்தில் மூலம் ராணுவத்திற்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதனை கொண்டாடி வரும் நெட்டிசன்கள், நாட்டிற்கு சேவை செய்ய ஆர்வமுடன் செல்லும் தென்காசி மாவட்ட இளைஞர்களுக்கு வாழ்த்துகள் எனக் கூறியுள்ளனர்.
















