உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை சங்கி என குறிப்பிட்டு பேசிய திருமாளவளன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
அண்மையில் மதுரை பழங்காநத்தத்தில் பேசிய திருமாளவளவன், காவல்துறை, உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் உள்ளிட்ட பல இடங்களில் சங்கிகள் உள்ளதாக பேசினார். மேலும், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுவாமிநாதன் என பெயர் வைத்துக்கொண்டும் சங்கிகள் இருப்பதாக கூறினார்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது அரசியல்சாயம் பூசிய திருமாவளவனுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நீதிமன்றம் தானாக முன்வந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் எனவும், அவர் மீது தமிழக போலீசார் நடவடிக்கை எடுக்காதது அதிர்ச்சி அளிப்பதாகவும் பலரும் தெரிவிக்கின்றனர். திருமாளவளவன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவரது எம்பி பதவி பறிபோகும் வாய்ப்பு உள்ளதாகவும் வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.
















