91 ஆண்டுகளாக பட்டா கேட்டு போராடும் ஏமனூர் கிராமம்..!
Jan 14, 2026, 01:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

91 ஆண்டுகளாக பட்டா கேட்டு போராடும் ஏமனூர் கிராமம்..!

ஒவ்வொன்றிற்கும் போராட வேண்டுமா? கிராம மக்கள் வேதனை...!

Murugesan M by Murugesan M
Dec 28, 2025, 07:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பட்டா வழங்கக் கோரி, ஒரு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் பல ஆண்டுகளாகப் போராடிக் கொண்டிருக்கின்றனர். பட்டா வழங்குவதில் ஏன் தாமதம். அதற்கான காரணம் என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

ஆடு, மாடுகள், மூட்டை முடிச்சுகளுடன் ஆண்டி வேடம் தரித்த இவர்கள், பொய் வாக்குறுதிகளை நம்பி ஏமாந்த ஏமனூர் கிராம மக்கள். பட்டா கேட்டுச் செவி சாய்க்காத அரசை கண்டித்துதான் இந்தப் போராட்டமே! 1925ம் ஆண்டு மேட்டூர் அணை கட்டப்பட்டபோது, அணை பகுதியில் வசித்த மக்களை மேட்டு நிலங்களுக்கு மாற்றியது அப்போதைய ஆங்கிலேயே அரசு.

5 ஆயிரம் ஏக்கர் நிலத்தை மேட்டூர் அணைக்காகத் தாரை வார்த்த மக்கள், அரசு வழங்கிய இடத்தில் குடிபெயர்ந்தனர். அதில், தருமபுரி மாவட்டம் ஏரியூர் ஒன்றியத்திற்குட்பட்ட நாகமரை ஊராட்சியில் ஏமனூர், சிங்காபுரம், ஆத்து மேட்டூர், தோழன்காடு, மேற்கு ஏமனூர் உள்ளிட்ட 7 கிராமங்களும் அடக்கம்.

இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. விவசாயத்தையும், மீன்பிடி தொழிலையும் நம்பி பிழைப்பு நடத்தி வரும் மக்கள், 91 ஆண்டுகளாக அங்கு வசித்து வருகின்றனர். இதில் ஏமனூர் கிராமத்தில் வசிக்கும் இடத்திற்கு பலமுறை பட்டா கேட்டும் அரசு வழங்க மறுப்பதாகக் கூறுகின்றனர் கிராம மக்கள்.

1997ம் ஆண்டு 450 வீடுகளுக்கு வழங்கிய பட்டாவை போலியானது எனக் கூறும் அதிகாரிகள், ஏமனூர் கிராமம் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் பட்டா வழங்க இயலாது என்று கைவிரிப்பதாகவும் தெரிவிக்கின்றனர். தெருவிளக்கு, குடிநீர், இலவச வீடு, மின்சாரம் என எதற்கும் வனத்துறை அனுமதி வழங்காததால், அரசு நலத்திட்டங்கள் தங்களுக்கு கிடைப்பதில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர்.

கடந்த ஐந்து வருடத்திற்கு முன்பு தேர்தலுக்கு ஓட்டு கேட்டு வந்தவர்கள், பட்டா வாங்கித் தர அனைத்து ஏற்பாடும் செய்வதாக வாக்குறுதி அளித்தார்கள் என்றும், தற்போது அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை என்றும் வேதனையுடன் கூறுகின்றனர்.

தங்கள் கிராமத்திற்கான அரசுத் திட்டங்களை பெற ஒவ்வொருமுறையும் போராட வேண்டியிருப்பதாகக் கிராம மக்கள் கூறுகின்றனர். அரசு தங்களது கோரிக்கைக்குச் செவிசாய்த்து, பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஏமனூர் கிராம மக்களின் விருப்பம்.

Tags: Yemanur village has been fighting for land title deeds for 91 years
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவுக்கு எதிரான சக்திகளுடன் கரம்கோர்க்கும் ராகுல் காந்தி? – காங்கிரஸ் மீது பாஜக பகீர் குற்றச்சாட்டு!

Next Post

மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை நிறைவேறுமா? – பொங்கல் தொகுப்புடன் மண் பானை வழங்குமா தமிழக அரசு?

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies