டிக்கெட் வாங்க தயாராகும் பயணிகள் : இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை தேதி அறிவிப்பு - சிறப்பு தொகுப்பு!
Jan 13, 2026, 11:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டிக்கெட் வாங்க தயாராகும் பயணிகள் : இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை தேதி அறிவிப்பு – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 3, 2026, 07:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் முதல் புல்லட் ரயில் சேவை தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டிருப்பது பயணிகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எப்போது எங்கே என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்…

இந்தியா முழுவதும் புல்லட் ரயில் சேவை எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்புக்கு விடையளித்துள்ளது ரயில்வே அமைச்சகம்… நாட்டின் முதல் புல்லட் ரயில் 2027ம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி இயங்கத் தொடங்கும் என்று கூறியுள்ள ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்தியா போக்குவரத்து உள்கட்டமைப்பில் ஒரு வரலாற்று மைல்கல்லைக் காண உள்ளது என்று தெரிவித்துள்ளார்…

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையையும், குஜராத் மாநிலம் அகமதாபாத்தையும் இணைக்கும் வகையில் 508 கிலோ மீட்டர் தொலைவுக்கு புல்லட் ரயில் சேவைக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதன்படி மும்பை – அகமதாபாத் இடையேயான அதிவேக ரயில் தடம் படிப்படியாக திறக்கப்படும என்று அறிவிக்கப்பட்டுள்ளது..அகமதாபாத், வதோதரா, பருச், சூரத், வாபி, தானே மற்றும் மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களை படிப்படியாக இணைக்க உள்ளது..

சூரத்திலிருந்து பிலிமோரா வரை முதற்கட்டமாகவும், வாபியிலிருந்து சூரத் வரை 2வது கட்டமாகவும், வாபி முதல் அகமதாபாத் வரை – மூன்றாவது கட்டமாகவும் புல்லட் ரயில் பாதை திறக்கப்படும் என்றும், தானே முதல் அகமதாபாத் வரையிலும் மும்பை முதல் அகமதாபாத் வரை இறுதியிலும் திறக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மும்பை- அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம், குஜராத் -தாத்ரா-நகர் ஹவேலிக்கு இடையே 352 கிலோ மீட்டர் தூரத்தையும், மகாராஷ்டிராவில் 152 கிலோ மீட்டர் தூரத்தையும் உள்ளடக்கியது.

இந்த வழித்தடத்தில் 85 சதவிகிதத்திற்கும் அதிகமான அதாவது 465 கிலோ மீட்டர் தொலைவு ரயில் பாதையானது, உயர்த்தப்பட்ட பாலங்களில் கட்டப்பட்டு வருகிறது. 326 கிலோ மீட்டர் உயரமான கட்டமைப்புகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ள நிலையில், 25 ஆற்றுப்பாலங்களில் 17 பாலப் பணிகள் முடிந்துள்ளன. 47 கிலோ மீட்டர் நீளமுள்ள சூரத்- பிலிமோரா பிரிவு மிகவும் முன்னேறிய பகுதிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இங்கு கட்டுமான பணிகளும், தண்டவாள படுக்கை தயாரிப்பு பணிகளும் முழுமை பெற்றுள்ளன.

உலகப் புகழ்பெற்ற வைரத் தொழிலால் ஈர்க்கப்பட்ட ஒரு கட்டமைப்பாக பார்க்கப்படும் சூரத் ரயில் நிலையம் 26.3 மீட்டர் உயரத்தில் 58 ஆயிரத்து 352 பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.

தரைதளம், பார்க்கிங் என மூன்று தளங்களாக கட்டப்பட்ட இந்த ரயில் நிலையம், தற்போது முழுமை பெறும் நிலையில் உள்ளன. 2027ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதியன்று தனது சேவையைத் தொடங்கும் புல்லட் ரயில், உலகத் தரம் வாய்ந்த நகரங்களுக்கு இடையேயான பயணத்தில் புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: suratThane.Railway MinistryIndia's first bullet train serviceBharuchVapiPM ModiAshwini vaishnawvadodaraAhmedabad
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடியின் ராஜதந்திரம் : யூனுஸை தனிமைப்படுத்தும் இந்தியா – சிறப்பு கட்டுரை!

Next Post

சோதனைகளை தொடங்கிய S4 அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் : இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பு திறனில் புதிய உச்சம் – சிறப்பு கட்டுரை!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies