பிரதமர் மோடியின் ராஜதந்திரம் : யூனுஸை தனிமைப்படுத்தும் இந்தியா - சிறப்பு கட்டுரை!
Sep 14, 2026, 10:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பிரதமர் மோடியின் ராஜதந்திரம் : யூனுஸை தனிமைப்படுத்தும் இந்தியா – சிறப்பு கட்டுரை!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 3, 2026, 07:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாகிஸ்தான் ஆதரவுடன் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளின் பிடியில் வங்கதேசம் முழுமையாக விழுவதற்கு முன், அந்நாட்டில் மீண்டும் ஜனநாயகம் மலர, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் அமைதியாகவும் நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

இந்தியாவைப் பொறுத்தவரை, வங்கதேசம் ஒரு அண்டை நாடு மட்டுமல்ல. கிழக்கு பகுதிகளின் அமைதிக்கு ஒரு தூணாகவும், நிலம் மற்றும் கடல்சார் பாதுகாப்பு அரணாகவும், வங்காள விரிகுடா புவிசார் அரசியலில் ஒரு முக்கிய நட்பு நாடாகவும், பயங்கரவாத நெட்வொர்க்-களுக்கு எதிரான ஒரு முக்கிய கவசமாகவும் உள்ளது.

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு வங்கதேசத்தில் ஜனநாயகம் கேள்விக் குரியதாக மாறியுள்ளது.

இடைக்கால அரசின் தலைவராக பொறுப்பேற்ற முகமது யூனுஸ், அடிப்படைவாத இஸ்லாமிய சக்திகளுடன் சேர்ந்துகொண்டு, இந்தியாவுக்கு எதிரான வெறுப்பு அரசியலுக்கு கதவுகளைத் திறந்துவிட்டார். வங்கதேசத்தை ஒரு “வங்காள பாகிஸ்தான்” ஆக மாற்றும் முயற்சிகளில் யூனுஸ் ஈடுபட்டுவருகிறார்.

ஜூலை போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினர் ‘தேசிய குடிமக்கள் கட்சி’ (NCP) என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளனர். இக்கட்சி அந்நாட்டில் மாற்று அரசியல் பற்றிப் பேசுவதாக, இந்தியாவைப் பகிரங்கமாக விமர்சித்து வருகிறது.

கடந்த 11 மாதங்களில், இந்தியாவுக்கு எதிராகப் பேசும் ஒரு கட்சியாக NCP தன்னை அடையாளப் படுத்தியுள்ளது.

இந்நிலையில், வங்கதேசத்தின் சுதந்திரத்தையே எதிர்த்த ஜமாத்-இ-இஸ்லாமி என்று அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கப் போவதாக NCP அறிவித்துள்ளது.

இன்னொரு பெரிய கட்சியான வங்கதேச தேசியவாத கட்சி, ‘ஜமியத் உலமா-இ-இஸ்லாம்’ உள்ளிட்ட மற்ற இஸ்லாமிய அமைப்புகளுடன் தேர்தல் கூட்டணி வைத்துள்ளது.

இந்தியாவுடன் நல்லுறவைப் பேணி வந்த ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்குத் தடை விதிக்கப் பட்டுள்ள நிலையில், வங்கதேச தேர்தல் அங்குள்ள இஸ்லாமிய சக்திகளுக்கு இடையேதான் நடைபெறவுள்ளது.

இதற்கிடையே வங்கதேச தேசியவாத கட்சியின் செயல்தலைவர் தாரிக் ரஹ்மான் 17 ஆண்டுகளுக்குப் பிறகு தாய் நாடு திரும்பிய சில நாட்களில் அவரது தாயாரும் அந்நாட்டின் முதல் பெண் பிரதமருமான கலீதா ஜியா 80வது வயதில் மரணமடைந்தார்.

கலீதா ஜியாவின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக வங்கதேசம் சென்ற மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், பிரதமர் மோடியின் பிரத்யேக இரங்கல் கடிதத்தை கலீதா ஜியாவின் மகனும் BNP யின் செயல் தலைவருமான தாரிக் ரஹ்மானிடம் ஒப்படைத்ததோடு பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளார். இது இதுவரை இல்லாத நடைமுறை என்று கூறப்படுகிறது.

டெல்லியில் உள்ள வங்கதேச தூதரகத்திற்கு சென்ற மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், அங்கிருந்த இரங்கல் புத்தகத்தில், இந்தியாவின் இரங்கல் செய்தியை எழுதியுள்ளார்.

மோடியின் இரங்கல் கடிதம், கலீதா ஜியாவின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் ஒரு சாதாரண நடவடிக்கையாக மட்டும் பார்க்கக் கூடாது என்றும், தேர்தலுக்குப் பிறகு பிரதமராக அதிக வாய்ப்புள்ள தாரிக் ரஹ்மான் தலைமையிலான BNP அரசுடன் இணைந்து செயல்பட இந்தியா தயாராக உள்ளது என்பதற்கான அடையாளம் என்றும் அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

முன்னதாக, 2024 ஆம் ஆண்டு டிசம்பரில் மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி டாக்காவுக்குச் சென்று, இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸுடன் பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும்,இந்திய இராணுவத் தலைமை தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, வங்கதேசத்தில் தீவிரமடையும் இந்திய எதிர்ப்பு பிரச்சாரங்கள் குறித்தும் பாதுகாப்பு நடவடிக்கை குறித்தும் வங்கதேச ராணுவத் தலைவர் வக்கர்-உஸ்-ஜமானிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இவையெல்லாம் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளிடமிருந்து விலகி இருப்பதும் மற்றும் மதச்சார்பற்ற, விடுதலைப் போரிலிருந்து உருவான அடையாளத்தைப் பாதுகாப்பதும் என ஒரு பொறுப்பான அரசு வங்கதேசத்தில் இருப்பதையே இந்தியா எதிர்பார்க்கிறது என்பதையே எடுத்துக்காட்டுகிறது.

தேசிய துக்கத்தில் பங்கெடுப்பதும், தாரிக் ரஹ்மானுக்கு இரங்கல் கடிதம் கொடுப்பதும் என புதிய இராஜதந்திரத்தின் மூலம் தனக்கான அரசியல் மட்டுமில்லாமல் வங்கதேச அரசியலையும் ஜனநாயக பாதைக்குத் திருப்புகிறது இந்தியா.

இதன் மூலம் வங்கதேசத்தின் மதச்சார்பற்ற ஜனநாயக அடையாளத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது என்பதை அழுத்தமாக இந்தியா பதிவு செய்துள்ளது.

Tags: PM Modiopposition protest bangladeshBangladesh protestindia protest against bangladeshprotest in bangladeshbangladesh protestsbangladesh protest indiabangladesh violence protestdelhi bangladesh protestmohammad younisbangladesh hindu protestprotest violence bangladeshprotest movement bangladeshbangladesh minority protesthindu killing bangladesh protestj bangladesh minorities protest
Share
Tweet
SendShare
Previous Post

ரஜினிகாந்தின்173-வது திரைப்படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார் – ராஜ் கமல் ஃபிலிம்ஸ் அறிவிப்பு!

Next Post

டிக்கெட் வாங்க தயாராகும் பயணிகள் : இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை தேதி அறிவிப்பு – சிறப்பு தொகுப்பு!

Related News

2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் – அமித் ஷா உறுதி!

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

விநாயகப் பெருமானின் அருளால் அனைவரது வா ழ்விலும் தடைகள் நீங்கி, நலமும் வளமும் பெருகட்டும் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies