டிக்கெட் வாங்க தயாராகும் பயணிகள் : இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை தேதி அறிவிப்பு - சிறப்பு தொகுப்பு!
Jun 15, 2026, 01:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டிக்கெட் வாங்க தயாராகும் பயணிகள் : இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை தேதி அறிவிப்பு – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 3, 2026, 07:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் முதல் புல்லட் ரயில் சேவை தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டிருப்பது பயணிகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எப்போது எங்கே என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்…

இந்தியா முழுவதும் புல்லட் ரயில் சேவை எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்புக்கு விடையளித்துள்ளது ரயில்வே அமைச்சகம்… நாட்டின் முதல் புல்லட் ரயில் 2027ம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி இயங்கத் தொடங்கும் என்று கூறியுள்ள ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்தியா போக்குவரத்து உள்கட்டமைப்பில் ஒரு வரலாற்று மைல்கல்லைக் காண உள்ளது என்று தெரிவித்துள்ளார்…

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையையும், குஜராத் மாநிலம் அகமதாபாத்தையும் இணைக்கும் வகையில் 508 கிலோ மீட்டர் தொலைவுக்கு புல்லட் ரயில் சேவைக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதன்படி மும்பை – அகமதாபாத் இடையேயான அதிவேக ரயில் தடம் படிப்படியாக திறக்கப்படும என்று அறிவிக்கப்பட்டுள்ளது..அகமதாபாத், வதோதரா, பருச், சூரத், வாபி, தானே மற்றும் மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களை படிப்படியாக இணைக்க உள்ளது..

சூரத்திலிருந்து பிலிமோரா வரை முதற்கட்டமாகவும், வாபியிலிருந்து சூரத் வரை 2வது கட்டமாகவும், வாபி முதல் அகமதாபாத் வரை – மூன்றாவது கட்டமாகவும் புல்லட் ரயில் பாதை திறக்கப்படும் என்றும், தானே முதல் அகமதாபாத் வரையிலும் மும்பை முதல் அகமதாபாத் வரை இறுதியிலும் திறக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மும்பை- அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம், குஜராத் -தாத்ரா-நகர் ஹவேலிக்கு இடையே 352 கிலோ மீட்டர் தூரத்தையும், மகாராஷ்டிராவில் 152 கிலோ மீட்டர் தூரத்தையும் உள்ளடக்கியது.

இந்த வழித்தடத்தில் 85 சதவிகிதத்திற்கும் அதிகமான அதாவது 465 கிலோ மீட்டர் தொலைவு ரயில் பாதையானது, உயர்த்தப்பட்ட பாலங்களில் கட்டப்பட்டு வருகிறது. 326 கிலோ மீட்டர் உயரமான கட்டமைப்புகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ள நிலையில், 25 ஆற்றுப்பாலங்களில் 17 பாலப் பணிகள் முடிந்துள்ளன. 47 கிலோ மீட்டர் நீளமுள்ள சூரத்- பிலிமோரா பிரிவு மிகவும் முன்னேறிய பகுதிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இங்கு கட்டுமான பணிகளும், தண்டவாள படுக்கை தயாரிப்பு பணிகளும் முழுமை பெற்றுள்ளன.

உலகப் புகழ்பெற்ற வைரத் தொழிலால் ஈர்க்கப்பட்ட ஒரு கட்டமைப்பாக பார்க்கப்படும் சூரத் ரயில் நிலையம் 26.3 மீட்டர் உயரத்தில் 58 ஆயிரத்து 352 பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.

தரைதளம், பார்க்கிங் என மூன்று தளங்களாக கட்டப்பட்ட இந்த ரயில் நிலையம், தற்போது முழுமை பெறும் நிலையில் உள்ளன. 2027ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதியன்று தனது சேவையைத் தொடங்கும் புல்லட் ரயில், உலகத் தரம் வாய்ந்த நகரங்களுக்கு இடையேயான பயணத்தில் புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: suratThane.Railway MinistryIndia's first bullet train serviceBharuchVapiPM ModiAshwini vaishnawvadodaraAhmedabad
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடியின் ராஜதந்திரம் : யூனுஸை தனிமைப்படுத்தும் இந்தியா – சிறப்பு கட்டுரை!

Next Post

சோதனைகளை தொடங்கிய S4 அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் : இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பு திறனில் புதிய உச்சம் – சிறப்பு கட்டுரை!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies