கோயிலின் புனிதம் மற்றும் பாதுகாப்பை தமிழக அரசு அலட்சியப்படுத்துவதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த நான்கு ஆண்டுகளில் மர்ம நபர்கள் கோயிகளில் அத்துமீறி நுழைத்து சுவாமி சிலைகளை உடைக்கும் சம்பவங்கள் நூற்றுக்கணக்கில் நடந்துள்ளதாகவும்,
குற்றவாளிகளை பிடித்து கொடுத்தால், சம்பந்தப்பட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று சொல்லி காவல்துறையினர் வழக்கை முடித்துவைப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
காவல்துறையின் அலட்சியம் அரிதானது அல்ல, வழக்கமானது என்பதையே சமீபத்திய சிதம்பரம் கோயில் சம்பவம் எடுத்து காட்டுவதாகவும்,
காவல்துறை திட்டமிட்டே அலட்சியமாகவும் ஏதோ காரணத்திற்காக குற்றவாளிகளை தப்ப விடுகிறதா? என்று கேள்வி எழுவதாகவும் கூறியுள்ளார்.
கோயிலில் நடக்கும் அத்துமீறல்கள் பக்தர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகிறதாகவும்,
கோயிலில் அத்துமீறி நடப்பவர்கள் மீதும், கோயில் சிலைகளை சிதைப்பவர்கள் மீதும் தமிழக அரசும், காவல்துறையும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
















