சென்னையில் அமைக்கப்பட்டு வரும் தமிழ்நாடு பாய்மர படகு பயிற்சி மையம், இன்னும் இரண்டு மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடத்தப்படும் 11வது சர்வதேச இளையோர் பாய்மரப் படகு விளையாட்டு போட்டியின் தொடக்க விழாவானது, சென்னை துறைமுக வளாகத்தில் நடைபெற்றது.
இதில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை முதன்மை செயலாளர் சத்யபிரதா சாகு, விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைத்தனர்.
அதைத்தொடர்ந்து, தமிழ்நாடு பாய்மர படகு விளையாட்டு சங்கம் – இந்திய கடலோர காவல் படை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
















