"ஷக்ஸ்காம்" இந்தியாவுக்கே சொந்தம்- சீனா-பாகிஸ்தான் CPEC பாதையை நிராகரித்த இந்தியா..சிறப்பு தொகுப்பு
Jan 13, 2026, 10:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

“ஷக்ஸ்காம்” இந்தியாவுக்கே சொந்தம்- சீனா-பாகிஸ்தான் CPEC பாதையை நிராகரித்த இந்தியா..சிறப்பு தொகுப்பு

Manikandan by Manikandan
Jan 10, 2026, 03:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீனா – பாகிஸ்தான் பொருளாதார வழித்தடை பாதை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி வழியாக செல்வதை ஏற்க முடியாது என இந்திய வெளியுறவுத்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது… சீனா – பாகிஸ்தான் செய்து கொண்ட ஒப்பந்தம் செல்லாது என்றும் கூறியுள்ளது… இதற்கான காரணம் என்ன விரிவாக பார்க்கலாம்…

லடாக்கின் வடக்கே, சியாச்சின் பனிப்பாறைக்கு அப்பால் அமைந்துள்ள இந்த மலைப்பகுதியின் பெயர்தான் Shaksgam Valley அதாவது ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு… 1963ம் ஆண்டு பாகிஸ்தான் மற்றும் சீனா இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது..

அதில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு பகுதியானது சீனாவுக்கு சட்டவிரோதமாக வழங்கப்பட்ட நிலையில், இந்த ஒப்பந்தத்தை இந்தியா அங்கீகரிக்கவில்லை… மாறாக, ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு பகுதி இந்தியாவுக்கு சொந்தமானது என்று வலியுறுத்தியது..

ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தையும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரையும் இணைக்கும் வகையில் அமைந்துள்ள நிலையில், இந்தியா – சீனாவுக்கு இடையேயான சர்ச்சைக்குரிய பகுதியாகவும் பார்க்கப்படுகிறது…

சீனா அண்மையில் இப்பகுதியில் சாலைகள் அமைத்து வரும் நிலையில், சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு வழியாகச் செல்வதை இந்தியா வன்மையாகக் கண்டித்துள்ளது…

இதுதொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு இந்தியாவின் ஒரு பகுதி என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

1963ம் ஆணடு கையெழுத்தான சீனா -பாகிஸ்தான் எல்லை ஒப்பந்தம் என்று அழைக்கப்படுவதை இந்தியா ஒருபோதும் அங்கீகரிக்காது என்றும் தெரிவித்தார். அந்த ஒப்பந்தம் சட்டவிரோதமானது, செல்லாதது என்றும் இந்தியா தொடர்ந்து கூறிவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்..

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் அனைத்தும் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாகும் என்றும், இது பாகிஸ்தான் மற்றும் சீன அதிகாரிகளுக்குப் பலமுறை தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது.

ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கில் தரை யதார்த்தத்தை மாற்றும் முயற்சிகளுக்கு எதிராகச் சீனத் தரப்பிற்கு இந்தியா தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவின் நலன்களைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் உரிமையைத் தேசம் விட்டுக்கொடுக்காது என்றும் வெளியுறவுத்துறை கூறியுள்ளது. இந்தியப் படைகளுக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த சியாச்சினுக்கு வடக்கே அமைந்துள்ள ஷக்ஸ்காம் பகுதியில் சீனா நீளமான அனைத்து வானிலைக்கும் ஏற்ற வகையிலான சாலையைத் தீவிரமாக அமைத்து வருகிறது…

கிட்டத்தட்ட 10 மீட்டர் அகலம் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ள இந்தச் சாலை 75 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஏற்கனவே நிறைவடைந்துவிட்டதாகவும், கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகின. நிலைமை இப்படியிருக்கும் நிலையில், இந்தியா அதற்கு எதிர்வினையாற்றியுள்ளது.

Tags: bjpShaksgamChina-Pakistanchina roadchina oak roadPM ModiIndia
ShareTweetSendShare
Previous Post

“தேசிய இளையோர் திருவிழா” – டெல்லி வந்த இளைஞர்களை சந்தித்து கலந்துரையாடிய மத்திய அமைச்சர் எல்.முருகன்!

Next Post

ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா? – தீவிரமடையும் போராட்டம்…இணைய சேவை துண்டிப்பு!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

காளைகளை அனுமதிப்பதில் பாரபட்சமா? – ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் மீது குவியும் புகார்

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies