"ஷக்ஸ்காம்" இந்தியாவுக்கே சொந்தம்- சீனா-பாகிஸ்தான் CPEC பாதையை நிராகரித்த இந்தியா..சிறப்பு தொகுப்பு
Mar 15, 2026, 07:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

“ஷக்ஸ்காம்” இந்தியாவுக்கே சொந்தம்- சீனா-பாகிஸ்தான் CPEC பாதையை நிராகரித்த இந்தியா..சிறப்பு தொகுப்பு

Manikandan by Manikandan
Jan 10, 2026, 03:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீனா – பாகிஸ்தான் பொருளாதார வழித்தடை பாதை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி வழியாக செல்வதை ஏற்க முடியாது என இந்திய வெளியுறவுத்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது… சீனா – பாகிஸ்தான் செய்து கொண்ட ஒப்பந்தம் செல்லாது என்றும் கூறியுள்ளது… இதற்கான காரணம் என்ன விரிவாக பார்க்கலாம்…

லடாக்கின் வடக்கே, சியாச்சின் பனிப்பாறைக்கு அப்பால் அமைந்துள்ள இந்த மலைப்பகுதியின் பெயர்தான் Shaksgam Valley அதாவது ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு… 1963ம் ஆண்டு பாகிஸ்தான் மற்றும் சீனா இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது..

அதில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு பகுதியானது சீனாவுக்கு சட்டவிரோதமாக வழங்கப்பட்ட நிலையில், இந்த ஒப்பந்தத்தை இந்தியா அங்கீகரிக்கவில்லை… மாறாக, ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு பகுதி இந்தியாவுக்கு சொந்தமானது என்று வலியுறுத்தியது..

ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தையும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரையும் இணைக்கும் வகையில் அமைந்துள்ள நிலையில், இந்தியா – சீனாவுக்கு இடையேயான சர்ச்சைக்குரிய பகுதியாகவும் பார்க்கப்படுகிறது…

சீனா அண்மையில் இப்பகுதியில் சாலைகள் அமைத்து வரும் நிலையில், சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு வழியாகச் செல்வதை இந்தியா வன்மையாகக் கண்டித்துள்ளது…

இதுதொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு இந்தியாவின் ஒரு பகுதி என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

1963ம் ஆணடு கையெழுத்தான சீனா -பாகிஸ்தான் எல்லை ஒப்பந்தம் என்று அழைக்கப்படுவதை இந்தியா ஒருபோதும் அங்கீகரிக்காது என்றும் தெரிவித்தார். அந்த ஒப்பந்தம் சட்டவிரோதமானது, செல்லாதது என்றும் இந்தியா தொடர்ந்து கூறிவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்..

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் அனைத்தும் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாகும் என்றும், இது பாகிஸ்தான் மற்றும் சீன அதிகாரிகளுக்குப் பலமுறை தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது.

ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கில் தரை யதார்த்தத்தை மாற்றும் முயற்சிகளுக்கு எதிராகச் சீனத் தரப்பிற்கு இந்தியா தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவின் நலன்களைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் உரிமையைத் தேசம் விட்டுக்கொடுக்காது என்றும் வெளியுறவுத்துறை கூறியுள்ளது. இந்தியப் படைகளுக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த சியாச்சினுக்கு வடக்கே அமைந்துள்ள ஷக்ஸ்காம் பகுதியில் சீனா நீளமான அனைத்து வானிலைக்கும் ஏற்ற வகையிலான சாலையைத் தீவிரமாக அமைத்து வருகிறது…

கிட்டத்தட்ட 10 மீட்டர் அகலம் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ள இந்தச் சாலை 75 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஏற்கனவே நிறைவடைந்துவிட்டதாகவும், கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகின. நிலைமை இப்படியிருக்கும் நிலையில், இந்தியா அதற்கு எதிர்வினையாற்றியுள்ளது.

Tags: china roadchina oak roadPM ModiIndiabjpShaksgamChina-Pakistan
ShareTweetSendShare
Previous Post

“தேசிய இளையோர் திருவிழா” – டெல்லி வந்த இளைஞர்களை சந்தித்து கலந்துரையாடிய மத்திய அமைச்சர் எல்.முருகன்!

Next Post

ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா? – தீவிரமடையும் போராட்டம்…இணைய சேவை துண்டிப்பு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

இங்கிலாந்தில் பெண்ணை உருளைக்கிழங்கு என கிண்டல் செய்த நபருக்கு 29 லட்சம் ரூபாய் அபராதம்!

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies