பழனியில் அறநிலையத்துறையின் கீழ் உள்ள இடும்பன் கோயிலை, பழனி கோயில் நிர்வாகத்துடன் இணைப்பதற்கான முயற்சியை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
பழனி மலை அடிவாரத்தில் அறிநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இடும்பன் கோயிலின் கீழ் 14 உபகோயில்களும், 60 ஏக்கர் விவசாய நிலங்களும் உள்ளது.
இந்நிலையில் இந்த கோயிலை பழனி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இணைக்க வேண்டுமென பழனி கோயில் அறங்காவலர் குழு மற்றும் கோயில் இணைஆணையர் ஆகியோர் தீர்மானம் நிறைவேற்றி இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
















