திருச்சி மாவட்டம் துறையூரில் மழையால் நெற்பயிர்கள் சேதமானதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
புளியஞ்சோலை, கோட்டப்பாளையம், பி.மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் 50 ஏக்கர் பரப்பளவில் நெல் பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. அப்பகுதியில் பெய்த மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதமடைந்தன. இதனால் கவலையடைந்துள்ள விவசாயிகள், தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் சுற்றுவட்டார பகுதிகளிலும் பெய்த மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதமடைந்தன. அறுவடைக்கு தயராக இருந்த நெல்மணிகள் முளைக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
















