500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் - பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!
Jan 14, 2026, 08:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

Manikandan by Manikandan
Jan 14, 2026, 07:09 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவின் 500 சதவிகித வரிவிதிப்பு அச்சுறுத்தலால் திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் கடும் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர். வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தை பல்வேறு நாடுகளுக்கு விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ள ஏற்றுமதியாளர்கள், வரிவிதிப்பால் ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய பல்வேறு சலுகைகளை அறிவிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்ற நிர்பந்தத்துடன், இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் 50 சதவிகிதம் வரியால் ஆயத்த ஆடை ஏற்றுமதியில் மட்டும் சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்திய தயாரிப்புகள் மீது 500 சதவிகிதம் வரை வரிவிதிக்கும் மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒப்புதல் அளித்திருப்பது ஏற்றுமதியாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதிய வரிவிதிப்பு அமலுக்கு வரும் பட்சத்தில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி என்பது முற்றிலும் ரத்தாகும் அபாயம் ஏற்படும் என ஏற்றுமதியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு 45 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆடைகள் ஆண்டுதோறும் திருப்பூரிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

அதிலும் குறிப்பாக அமெரிக்காவுக்கு மட்டும் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பின்னலாடை ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஏற்கனவே 50 சதவிகித வரி விதிப்பிலேயே பெரும் இழப்பை சந்தித்து வரும் நிலையில் தற்போது 500 சதவிகிதம் வரி விதிப்பு அமலுக்கு வந்தால் ஏற்றுமதி முடங்குவதோது பல லட்சம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் சூழலும் உருவாகும் என ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் இத்தகைய முடிவால் ஏற்படும் இழப்பை சரிகட்ட மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, ஜவுளித்துறைக்கென தனி சலுகைகளையும் அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

அதோடு பின்னலாடை உற்பத்தியாளர்களின் கடனை தள்ளுபடி செய்வதோடு, வரியில்லா வர்த்தக ஒப்பந்தந்த்தை மேலும் பல நாடுகளுக்கு விரிவாக்கம் செய்ய வேண்டும் எனவும் ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: IndiaamericaTiruppurdressamerica india tariffindia tariffamerica tariff
ShareTweetSendShare
Previous Post

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies