காங்கிரஸின் எதிர்மறை அரசியலை மக்கள் வெறுப்பதையே மும்பை உள்ளாட்சி தேர்தல் முடிவு பிரதிபலிப்பதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
அசாம் மாநிலம் கலியாபோரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். தொடர்ந்து அவர், கவுகாத்தி-ரோத்தக், திப்ரூகர்- லக்னோ இடையேயான 2 அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையை தொடங்கி வைத்தார்.
மேலும் நிகழ்ச்சியில் காசிரங்கா தேசிய பூங்கா வழியாக செல்லும் மேம்பால வழித்தட திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், காங்கிரஸின் எதிர்மறை அரசியலை மக்கள் வெறுப்பதையே மும்பை உள்ளாட்சி தேர்தல் முடிவு பிரதிபலிப்பதாக தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியில் எந்த வளர்ச்சித் திட்டமும் இல்லாததால், அந்த கட்சி நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும் பிரதமர் மோடி விமர்சித்தார்.
















