சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் அருகே தொழில்துறை பாதுகாப்பு படை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் “CISF வந்தே மாதரம் கடற்கரை சைக்கிள் பயணம் 2026” குறித்த விழிப்புணர்வு பாடல் வெளியிடப்பட்டது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய CISF தென்மண்டல ஐஜி சரவணன், வரும் 28ஆம் தேதி டெல்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் தேசிய விளையாட்டு அரங்கில் CISF வந்தே மாதரம் கடலோர சைக்கிள் பயணம் காணொலி வாயிலாக தொடங்கப்படும் என தெரிவித்தார்.
கடற்கரை பகுதியில் 6 ஆயிரத்து 553 கிலோ மீட்டர் தூரத்திற்கு 130 வீரர்கள் சைக்கிளில் பயணம் மேற்கொள்கின்றனர் என்றும், 25 நாட்கள் செல்லும் சைக்கிள் பயணத்தில் 11 தமிழர்களும் இடம்பெற்றுள்ளதாகவும் கூறினார்.
52 கடலோர பகுதிகளில் பயணிக்கும்போது, அந்த கிராமங்களில் தங்கி மக்களின் பிரச்னகைளை வீரர்கள் கேட்டறிவார்கள் எனவும் குறிப்பிட்டார்.
















