பிரதமர் மோடி வரும் 23ஆம் தேதி சென்னை வருவதை ஒட்டி மீனம்பாக்கம், கிண்டி ஆகிய பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு கூட்டணிக் கட்சி தலைவர்கள் மத்தியில் சிறப்புரை ஆற்ற உள்ளார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக மீனம்பாக்கம் மற்றும் கிண்டி ஆகிய பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், ட்ரோன் கேமராக்கள், ஆளில்லா வான்வழி கருவிகள் பறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன.
















