ஏஐ தாக்க உச்சி மாநாடு இந்தியாவின் முன்னேற்றங்களையும் சாதனைகளையும் எடுத்துரைக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மன் கி பாத்தின் 130வது அத்தியாயத்தில் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது, ஸ்டார்ட் அப் இந்தியா முன் முயற்சியின் 10வது ஆண்டு நிறைவை முன்னிலைப்படுத்தி பேசினார்.
2016ஆம் ஆண்டு 500க்கும் குறைவான ஸ்டார்ட்அப்களுடன் தொடங்கிய இந்தச் சூழலமைப்பு தற்போது 2 லட்சத்துக்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களாக வளர்ந்துள்ளது எனக் குறிப்பிட்டார்.
கடந்த 10 ஆண்டுகளில் அடைந்த முன்னேற்றங்களை எடுத்துரைத்த பிரதமர், தற்போது இந்தியா உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்அப் சூழலமைப்பாக உருவெடுத்துள்ளது எனக் கூறினார்.

பஜனைகளும் கீர்த்தனைகளும் பல நூற்றாண்டுகளாக நமது கலாச்சாரத்தின் ஆன்மாவாக இருந்து வருவதாக கூறிய பிரதமர் மோடி, ஜென்-இசட் தலைமுறையினரிடையே அதிகரித்து வரும் பஜன் கிளப்பிங் கலாசாரத்தை வெகுவாக பாராட்டினார்.
பிப்ரவரி நடைபெறவுள்ள ஏஐ தாக்க உச்சி மாநாடு, செயற்கை நுண்ணறிவுத் துறையில் உலகளாவிய தலைவராக இந்தியாவின் நிலையை உறுதிப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாகப் போற்றப்படுகிறது எனக் குறிப்பிட்டார்.
மேலும், ஏஐ தாக்க உச்சி மாநாடு மக்கள், பூமி, முன்னேற்றம் ஆகிய மூன்று சூத்திரங்களை மையமாகக் கொண்டு இருக்கும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
















