சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொது தீட்சிதர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் சவுந்தர் அடங்கிய அமர்வு இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்தது.
அப்போது தீட்சிதர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தனி பிரிவினருக்கான கோவில் விவகாரங்களில் அரசு தலையிட முடியாது எனவும், இந்த விவகாரம் அரசியலாக்கப்படுகிறது என்றும் குற்றம்சாட்டினார்.
அப்போது குறுக்கிட்ட இந்து சமய அறநிலைய தரப்பு வழக்கறிஞர், கனகசபை தொடர்பான வழக்கில் அரசியல் செய்யவில்லை எனவும், விசாரணையை தள்ளிவைப்பதாக இருந்தால் பக்தர்களுக்கென மற்றொரு வழியை அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
இதனை நிராகாரித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை பிப்ரவரி 19ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
















