தைப்பூச ஜோதி தரிசன பெருவிழாவையொட்டி வடலூர் சத்திய ஞான சபையில் 7 திரைகள் விலக்கப்பட்டு முதல் ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம், வடலூரில் உள்ள ஞான சபையில் ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி தரிசன விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், 155வது ஜோதி தரிசன விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், காலை 6 மணிக்கு ஏழு திரைகள் விலக்கி முதல் ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ஜோதியை வழிபட்டனர்.
இதனை தொடர்ந்து, காலை 10 மணி, நண்பகல் 1 மணி, இரவு 7 மற்றும் 10 மணி, மறுநாள் காலை 5.30 மணி ஆகிய 6 காலங்களில் 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் நடைபெறவுள்ளது.
ஜோதி தரிசனத்தை காண லட்சக்கணக்கானோர் வடலூரில் கூடியுள்ளதால் ஆயிரத்து 700க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
















