மத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழகத்தில் அரிய வகை கனிம வழித்தடங்கள் அமைக்கப்படும் என அறிக்கையில் தெரிவித்தார்.
மத்திய நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா நீதாராமன் தமிழகத்தில் அரிய வகை கனிம வழித்தடங்கள் அமைக்கப்படும் எனவும் அதற்கான மையங்கள் தமிழகம், ஒடிசா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் செமி கண்டக்டர் 2.ஓ திட்டத்திற்காக 40 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் எனவும் இது நாட்டின் உற்பத்தி திறனை மேம்படுத்தும் எனவும் கூறினார்.
நாட்டின் உட்கட்டமைப்பினை மேம்படுத்தும் விதமாக இயந்திரங்கள் தயாரிப்பிற்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் எனவும்
காதி துறைக்காக மகாத்மா காந்தி சுவராஜ் திட்டத்தை அறிமுகப்படுத்துவதாகவும் அதற்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
நுண் சிறுகுறு தொழில்துறையை மேம்படுத்த மும்முனை திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது என தெரிவித்துள்ள நிர்மலா சீதாராமன் இதற்காக பத்தாயிரன் கோடி ரூபாயை ஒதுக்குவதாக கூறினார்.
தேசிய நீர்வழிப் போக்குவரத்து வழித்தடம் ஒடிசாவில் ஏற்படுத்தப்படும் என தெரிவித்த அவர் நாட்டின் அனைத்து பிராந்தியத்தையும் இணைக்கும் வகையில் நீர்வழி முனையங்கள் அமைக்கப்படும் எனத் தெரிவித்தார்
சென்னை – பெங்களூர் – ஹைதராபாத் இடையே அதிவேக ரயில் சேவை அறிமுகப்படுத்தப்படும் எனவும்
அடுத்த ஐந்து ஆண்டுகளில் 20 புதிய நீர்வழித்தடங்கள் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும் ஏஐ-க்கு கூடுதல் கவனம் செலுத்தப்படும் என தெரிவித்த நிதியமைச்சர் குவாண்டம் தொழில்நுட்பத்தை பல்வேறு துறைகளுக்கும் கொண்டு வருவதற்கான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் எனக் கூறினார்.
நாட்டின் 5 இடங்களை மையமாக கொண்டு மருத்துவ சுற்றுலா அமைக்கப்படும் எனத் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் 3 தேசிய ஆயுர்வேத மருத்துவமனைகள் அமைக்கப்படும் எனவும் நிதிநிலை அறிக்கையில் தெரிவித்தார்.
















