சுயதொழில் செய்யும் மற்றும் சிறு வியாபாரம் தொடங்க விரும்பும் பெண்களுக்காக SHE MARTS என்ற கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த பின் உரையாற்றிய அவர், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களை சிறு தொழில்முனைவோராக்க SHE MARTS என்ற கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் எனக் கூறினார்.
கிராமப்புறப் பெண்களின் தயாரிப்புகளுக்கு பெரிய சந்தை வாய்ப்பை உருவாக்கவும்,
பெண்கள் தயாரிக்கும் பொருட்களின் பிராண்டுகளை மேம்படுத்தி, நிலையான வருமானத்தை உருவாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சமூகத்தால் நிர்வகிக்கப்படும் சில்லறை விற்பனை கடைகள் மண்டல அளவில் அமைக்கப்படும் என்றும்,
சாதாரண வங்கிக் கடன்கள் மட்டுமின்றி, கூடுதலாக நிதி உதவி வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும், லட்சாதிபதி திதி (Lakhpati Didi) திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் SHE MARTS கடன் திட்டத்தில் பயனடைவார்கள் எனவும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
















