உலகளவில் அனைத்து துறைகளிலும் இந்தியா முதன்மை நாடாக திகழ்வதற்கான அடித்தளமாக பட்ஜெட் அமைந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், 15 தொல்பொருள் தளங்களை கலாச்சார தலங்களாக மேம்படுத்த மோடி அரசு எடுத்த முடிவு, இந்தியாவின் பண்டைய கலாச்சாரத்தை உலக அரங்கில் நிலைநிறுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.
















