பலுசிஸ்தானில் கடந்த 2 நாட்களில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 130-ஐ கடந்துள்ளது. பலுசிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவத்திருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது.
இந்த மோதலில் 15 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், 92 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
இதே போல், பஞ்ஜ்குர் மற்றும் ஹர்னாய் ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 41 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதன் மூலம், 2 நாட்களில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 133 ஆக அதிகரித்துள்ளது.
















