திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வலியுறுத்தி கிராமப் பெண்கள் நடத்திய 108 விளக்கு பூஜை பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான மதுரை திருப்பரங்குன்றத்தில், தைப்பூசத் திருநாளை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில், , திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வலியுறுத்தி அப்பகுதி பெண்கள் 108 குத்துவிளக்கு ஏற்றி வழிபாட்டில் ஈடுபட்டனர். தைப்பூச நன்னாளில் ஆன்மீக ரீதியாக தங்கள் கோரிக்கையை முன்வைக்கும் விதமாக இந்த விளக்கு பூஜையை நடத்தியதாக நெகிழ்ச்சியுடன் அப்பகுதி பெண்கள் தெரிவித்துள்ளனர்.
















