மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள அதிவேக ரயில் மூலம் சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு ஒரு மணி நேரம் 13 நிமிடத்தில் செல்ல முடியும் என்று ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களை இணைத்து ‘தெற்கு அதிவேக முக்கோணம் அல்லது தெற்கு அதிவேக வைரம்’ போன்ற அமைப்பு உருவாக்கப்படும் என்று கூறியுள்ளார்.
இது தமிழகம், கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, கேரளா ஆகிய 5 தென்னிந்திய மாநிலங்களுக்கும், புதுச்சேரிக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இருந்து பெங்களூருவுக்கான ரயில் பயண நேரம் வெறும் 1 மணி நேரம் 13 நிமிடங்களாகக் குறையும் என்றும், அதேபோல, 2 மணிநேரத்தில் பெங்களூருவில் இருந்து ஹைதராபாத்துக்கு சென்று விடலாம் என்றும் சுட்டிகாட்டியுள்ளார்.
சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கான பயண நேரம் 2 மணிநேரம் 55 நிமிடங்களாக இருக்கும் எனவும் அஸ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்டுள்ளார்.
















