தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே ஆற்றின் குறுக்கே இரும்பு பாலம் கட்டும் பணிகள் தொடங்கியுள்ளன.
விக்கிரமசிங்கபுரம் நகராட்சிக்கு உட்பட்ட மயிலாறு வனப்பகுதியில் 90 பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இப்பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில், மழைக்காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவது வழக்கம். இதனால் ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து செல்லும் சூழல் நிலவியது.
இது தொடர்பாக தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இதையடுத்து இப்பகுதியில் இரும்பு பாலம் கட்ட 99 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.
நடவடிக்கை எடுத்த தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
















