கல்குவாரி கொள்ளையர்களுக்கு திமுக பிராந்திய அரசு உடந்தையாக உள்ளதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட ராணுவ வீரர்கள், தங்கள் சொந்த கிராமங்களை பெரும் கொள்ளையிலிருந்து பாதுகாக்க விடுப்பு எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார்கள் என்றால், அது ஊழல் நிறைந்த திமுக ஆட்சியின் நிர்வாகத்தின் மீது சுமத்தப்படும் ஒரு கடுமையான குற்றச்சாட்டு என தெரிவித்துள்ளார்.
இதைவிட மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், தங்கள் கிராமத்தில் உள்ள அய்யனார் மற்றும் பெருமாள் கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களும், பட்டியல் சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்களும் கல் குவாரிக்காக திட்டமிட்டு அபகரிக்கப்பட்டுள்ளதாக அந்த வீரர்கள் குற்றம்சாட்டுவிதாக அவர் கூறியுள்ளார்.
இந்தக் கொள்ளை சம்பவம் மாநிலம் முழுவதும் நடந்துகொண்டிருக்கும் நிலையில், திமுக ஒரு மௌன சாட்சியாக இருந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அமலாக்கத்துறை ஏற்கனவே தமிழ்நாடு முழுவதும் பரவலாக நடைபெறும் சட்டவிரோத மணல் கொள்ளையை சுட்டிக்காட்டியுள்ளது என்றும், தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் சட்டவிரோத கல் குவாரி நடவடிக்கைகளை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் திமுக பிராந்திய அரசாங்கம் வேண்டுமென்றே எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சிய போக்குடன் செயல்படுவதாகவும் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
















