மதுரை கீழக்கரையில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் உள்ள ஏறுதழுவுதல் அரங்கத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி மற்றும் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்த போட்டியில் ஆயிரத்து 200 காளைகள், 500 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்ட நிலையில், வாடிவாசல் வழியாக சீறிபாய்ந்த காளைகளை வீரர்கள் தீரத்துடன் அடக்கினர்.
ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் காளையின் உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு சைக்கிள், அண்டா உள்ளிட்ட பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன. மேலும், ஜல்லிக்கட்டு போட்டியை ஏராளமானோர் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
















