மாணவர்கள் உயரும் போது நாடும் உயருமென ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாட்டில் இருந்து பங்கேற்ற மாணவர்களுடன், ஆளுநர் கலந்துரையாடும் நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, மாணவர்கள் நேர மேலாண்மையை கடைபிடிக்க வேண்டுமென அறிவுறுத்தினார்.
மாணவர்கள் எந்த துறையை தேர்ந்தெடுத்தாலும் அதில் தலை சிறந்தவர்களாக மாற உழைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மேலும் மாணவர்கள் உயரும்போது, நாடும் உயருமெனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
















