கேரளாவில் சபரிமலை கோயில் தங்கம் திருட்டு வழக்கு தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக இளைஞரணி நிர்வாகிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வழக்கில் உன்னிகிருஷ்ணன் போத்தி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக இளைஞரணியினர், சட்டமன்றத்தை நோக்கி பேரணியாக சென்றனர்.
அப்போது தடுப்புகள் அமைத்து அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், போராட்டக்காரர்களை கலைக்க தண்ணீரை பீய்ச்சி அடித்தது.
இருப்பினும், அங்கிருந்து கலைந்து செல்லாமல் பாஜகவினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
















