மும்பை விமான நிலையத்தில் இருவேறு விமானங்களின் இறக்கைகள் உரசி விபத்து ஏற்பட்ட நிலையில், பயணிகள் மற்றும் ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
மும்பை விமான நிலையத்தின் ஓடுபாதையில் ஏர் இந்தியா விமானம் கோவைக்கு புறப்பட தயார் நிலையில் இருந்தது. அதே நேரத்தில் ஹைதராபாத்தில் இருந்து மும்பை வந்த இண்டிகோ விமானம் விமான நிலையத்தின் ஓடுபாதையில் தரையிறங்கியது.
அப்போது எதிர்பாராத விதமாக தயார் நிலையில் இருந்த ஏர் இந்தியா விமானத்தின் வலது பக்க இறக்கை மீது இண்டிகோ விமானத்தின் வலது பக்க இறக்கை உரசி விபத்து ஏற்பட்டது.
இதில் ஏர் இந்தியா விமானத்தின் இறக்கை சேதமடைந்தது. தொடர்ந்து இரு விமானங்களிலும் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் என அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரு விமானங்களும் பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டன. தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த DGCA அதிகாரிகள் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















