ஓசூர் அருகே இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி அமைச்சர் சக்கரபாணியை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தேன்கனிக்கோட்டை அருகே தண்டரை ஊராட்சியில் 8 கிராமங்கள் உள்ளன. இங்கு 200க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள், கடந்த 20 ஆண்டுகளாக இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் அவர்களில் 48 பேருக்கு மட்டும் அமைச்சர் சக்கரபாணி, ஆட்சியர் தினேஷ்குமார் ஆகியோர் பட்டா வழங்கினர். இதனால் அதிருப்தியடைந்த 100க்கும் மேற்பட்ட மக்கள் தங்களுக்கும் பட்டா வழங்க வலியுறுத்தி அமைச்சர் மற்றும் ஆட்சியரை முற்றுகையிட்டனர்.
இதனை தொடர்ந்து தண்டரை கிராம மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தின் நுழைவு வாயில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய வட்டாட்சியர், கிராமத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்து தகுதியானவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என உறுதியளித்தார். இதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
















