சென்னை மதுரவாயலில் தவெக நிர்வாகியின் கணவர், இளைஞரை கத்தியால் குத்திய சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரவாயல் எம்.எம்.டி.ஏ.காலனி பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். தவெக நிர்வாகியின் கணவரான இவர், அப்பகுதியில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் சென்ற நிலையில், அதே பகுதியை சேர்ந்த அஸ்லாம் என்ற இளைஞர்தான் தகவல் அளித்தார் எனக்கூறி அவர் மீது கார்த்திக் கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளார்.
மேலும் போதை வஸ்துகளை பயன்படுத்துமாறு வற்புறுத்தி கத்தியால் கடுமையாக தாக்கியுள்ளார். தொடர்ந்து கார்த்திக் கைது செய்யப்பட்ட நிலையில், சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
















