நகராட்சி நிர்வாகத்துறையின் நியமனம் மற்றும் டெண்டர் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான புகாரில் வழக்குப்பதிவு செய்ய கோரி மனுவின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
நகராட்சி நிர்வாகத்துறையில் அதிகாரிகள் நியமனம், டெண்டர் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை அனுப்பிய கடிதத்தின்பேரில் வழக்குப்பதிவு செய்ய கோரி அதிமுக எம்.பி உட்பட இருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, மனுக்கள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் அமலாக்கத்துறை தரப்பில் வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டன.
பின்னர், அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து வழக்கின் தீர்ப்னை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
















