திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஸ்ரீவெற்றி வேலாயுத சாமி கோயிலில் தைப்பூசத்தையொட்டி மலை தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.
ஊத்துக்குளி கைத்தமலை ஸ்ரீ வெற்றி வேலாயுதசாமி கோயில் தைப்பூசத் தேரோட்ட திருவிழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கைத்தமலை ஆண்டவர் சுவாமி ரத ஆரோகணம், மலைத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் திரளானோர் கலந்து கொண்டு அரோகரா கோஷத்தோடு தேரை வடம் பிடித்தனர்.
















