கேரளாவில் குடியிருப்பிற்குள் புகுந்த ராட்சத ராஜநாகம் பிடிபட்டது.
கோட்டயம் மாவட்டம் முண்டக்காயம் அருகே உள்ள ஒரு வீட்டில் உள்ள பீரோவிற்குள் பெரிய பாம்பு இருப்பதை வீட்டு உரிமையாளர் கவனித்தார்.
உலகின் மிகக் கொடிய விஷப் பாம்பான ராஜநாகம் என்பது தெரிந்ததும் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாம்புபிடி வீரர்கள், மிகவும் கவனமாகச் செயல்பட்டு சுமார் 15 அடி நீளம் கொண்ட அந்த ராஜநாகத்தைப் பத்திரமாகப் பிடித்தனர்.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் ராஜநாகம் புகுந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
















