சென்னையில் நடந்த கைத்தறி துறை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத அமைச்சர் காந்தியை, முதலமைச்சர் ஸ்டாலின் கடிந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கலைவாணர் அரங்கில் கைத்தறி துறை சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கைத்தறித்துறை அமைச்சர் காந்தி கலந்து கொள்ளாமல் இருந்துள்ளார்.
இதனால், அதிருப்தியடைந்த முதலமைச்சர் ஸடாலின், தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த அமைச்சர் காந்தியை கடிந்து கொண்டுள்ளார். புத்தகம் கொடுத்த வரவேற்ற அமைச்சர் காந்தியை முதலமைச்சர் ஸ்டாலின் கடுமையாக கடிந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது..
















