மக்களவையில் நேற்று பிரதமர் மோடி மீது காங்கிரஸ் எம்பிக்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக ஊடகவியலாளர்கள் வெளியிட்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது மக்களவையில் பிரதமர் மோடி நேற்று உரையாற்ற இருந்தார்.
மக்களவையில் உரையாற்ற தயாராக இருந்த நிலையில் பிரதமர் மோடியை தாக்க காங்கிரஸ் எம்பிக்கள் திட்டமிட்டதாக தகவல் வெளியானது.
இதன் காரணமாகவே அவையை ஒத்திவைக்க சபாநாயகர் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
பிரதமரை தாக்க காங்கிரஸ் எம்பிக்கள் திட்டமிட்டிருந்ததாக ஆங்கில ஊடகவியலாளர் பல்லவி கோஷ் உள்ளிட்டோர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் மக்களவையில் பிரதமர் உரையாற்றாமல் இருந்தது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் உறுப்பினர்களின் சதித்திட்டத்தை அறிந்து நேற்று மக்களவையை ஒத்திவைத்ததாக சபாநாயகர் ஓம் பிர்லா தகவல்
பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தால் இந்தியாவின் ஜனநாயக மாண்புகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்
நேற்று நான்தான் பிரதமர் மோடியை அவைக்கு வர வேண்டாம் என தெரிவித்தேன் என சபாநாயகர் கூறியுள்ளார்
காங்கிரஸ் எம்.பிக்கள் ஜோதிமணி, சுதா, வர்ஷா கெய்க்வாட் உட்பட 6 பேர் பிரதமர் மோடியை முற்றுகையிட திட்டமிட்டதாக தகவல்
பெண் எம்.பிக்களை முன்னிறுத்தி பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த காங்கிரஸ் சதித்திட்டம் தீட்டியதாக தகவல்
















