சென்னையில் அண்மையில் உயிரிழந்த காகங்களின் மாதிரியில் H5N1 என்ற பறவை காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு உறுதி செய்துள்ளது.
தமிழ்நாடு தலைமைச் செயலாளருக்கு மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் உற்பத்தித்துறை அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில், சென்னையில் பறவைக் காய்ச்சல் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பறவைகள் உயிரிழந்த பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கவும், உயிரியல் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வழக்கத்திற்கு மாறாக பறவைகள் உயிரிழந்தால் அதனை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்றும்,
கோழிப் பண்ணைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இறந்த பறவைகளை கையால் தொடக்கூடாது என்றும், உயிரிழந்த பறவைகளை 8 முதல் 10 அடி ஆழத்தில் புதைக்க அல்லது எரிக்க வேண்டும் எனவும் மத்திய கால்நடைத்துறை அறிவுறுத்தியுள்ளது.
















